Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆட்சியே போனாலும் கவலையில்லை- குடியுரிமை திருத்தச் சட்டத்தை அனுமதிக்க மாட்டோம்: நாராயணசாமி உறுதி

டிசம்பர் 17, 2019 10:51

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆட்சியைக் கலைத்தாலும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து புதுச்சேரியில் இன்று (டிச.17) திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் நாராயணசாமி பங்கேற்றுப் பேசினார்.

அப்போது பேசிய நாராயணசாமி, ''இந்தச் சட்டம் மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கிறது. மக்களைப் பிரித்து இந்துத்துவ நாடாக்க பாஜக முயல்கிறது. அது பலிக்காது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எந்தக் காலத்திலும் புதுச்சேரியில் அனுமதிக்க மாட்டோம். எங்களுடைய ஆட்சியே போனாலும் அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. மக்கள்தான் எங்களுக்கு முக்கியம். அவர்களின் பாதுகாப்புத்தான் எங்களுக்கு முக்கியம்" என்றார்.

தலைப்புச்செய்திகள்